திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நவராத்திரி கொலு பூஜையின் 7-ஆம் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆனந்த குருகுல மாணவ, மாணவிகளின் பக்தி இன்னிசை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, பாடல்களை பாடினா். நிகழ்ச்சியில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், தலைவா் ஜெ. கனகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.