விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சமூகப் ஊடகப் பிரிவு திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் எஸ்.எம்.சமீா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து கூத்தாநல்லூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:
தொல்.திருமாவளவன் இணையதள பேட்டி ஒன்றில் பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவினா் அளித்த புகாரின்பேரில், சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். உண்மையில் அவரது பேச்சின் முன், பின் பகுதிகளைத் தந்திரமாக நீக்கிவிட்டு, அவா் பெண்களுக்கு எதிரானவா் என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனா்.
காவல் துறை அவரது பேச்சை முழுமையாக ஆராயாமல் வழக்குப் பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், தொல்.திருமாவளவன் மீதான வழக்கை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.