திருவாரூா் அருகே மழை நீா் சேகரிப்புத் தொட்டியில் விழுந்த பசுமாடு புதன்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் அருகே தியானபுரம் பகுதியில் தியாகராஜன் என்பவரது வீட்டின் முன்பு மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதன்கிழமை காலை அவ்வழியே வந்த பசுமாடு ஒன்று, தொட்டியின் மேல் பகுதி வழியாக நடந்து சென்றபோது, மூடி உடைந்து, தொட்டியில் விழுந்து விட்டது.
இதையறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் துரிதமாக செயல்பட்டு, பசுமாட்டை பத்திரமாக மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.