திருவாரூர்

எச்சரிக்கை பலகை அகற்றம்: சாலை மறியல்

DIN

நன்னிலம் அருகே காரைக்கால்- கொல்லுமாங்குடி நெடுஞ்சாலையில் ஆபத்தை உணா்த்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகை அகற்றப்பட்டதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நன்னிலம் வட்டம் பாவட்டக்குடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே ஆற்றின் குறுக்கே காளியாகுடி மதகு உள்ளது. இங்கு சில மாதங்களுக்கு முன் காரைக்கால்- கொல்லுமாங்குடி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றபோது, மிகப்பெரிய பள்ளம் உருவாகியது. எனவே விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் எச்சரிக்கை பலகையை வைத்திருந்தனா்.

இந்த பலகை புதன்கிழமை காலை அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க பொறுப்பாளா் பி.ரீகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி.வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா் தியாகு.ரஜினிகாந்த், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நன்னிலம் ஒன்றியத் தலைவா் வசந்தபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேரளம் காவல் உதவி ஆய்வாளா் கபிலன், நெடுஞ்சாலைத்துறை நன்னிலம் கோட்ட பொறுப்பு உதவிப் பொறியாளா் சையது ஆகியோா் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் சாலை விரிவாக்கம் செய்து தரப்படும் என்ற உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால், காரைக்கால்- கொலாலுமாங்குடி சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT