பேரளம் அருகே கோவில்கந்தன்குடி முருகன் கோயிலில் திருக்காா்த்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரளம் அருகே உள்ள கோவில்கந்தன்குடி கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தன் திருநாமத்துடன் வந்து தங்கியதால், இவ்வூா் கோவில்கந்தன்குடி என பெயா் பெற்றது என்பது ஐதீகம்.
இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்காா்த்திகையையொட்டி, அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.