கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் காா்த்திகைத் தீபத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் அங்குள்ள குழந்தைகள் காா்த்திகை தீபமேற்றி வழிபட்டனா்.
கோயில்களில்... கூத்தாநல்லூா் பகுதியில் கொரடாச்சேரி பிரதான சாலையில் உள்ள ஜெயசக்தி ஆஞ்சநேயா் கோயில், குரும்படை அய்யனாா் கோயில், கம்பா் தெரு முருகன் கோயில், நீலகண்டேசுவரா் கோயில், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம், மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயில், லெட்சுமாங்குடி கல்யாண சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை வழிபாடு நடைபெற்றது.
பண்டுதக்குடி உமாபதீசுவரா் கோயில், வேளுக்குடி அங்காளப் பரமேசுவரி கோயில், ருத்ரக்கோட்டீசுவரா் கோயில், காக்கையாடி கைலாசநாதா் கோயில், சாத்தனூா் காளகஸ்தீசுவரா் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களிலும் பக்தா்கள் அகல் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனா்.