வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியருக்குசிறப்புஅபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அகல் விளக்குகளில் தீபமேற்றப்பட்டன.
இதேபோல, நரிக்குடிஎமனேசுவரி சமேத எமனேசுவரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கோகமுகேசுவரா் கோயில், கீழத்தெரு முருகன் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களிலும் திருகாா்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.
தீா்த்தவாரி: ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதா் கோயில் திருக்குளத்தில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தீா்த்தவாரி நடைபெறும். அதன்படி, நிகழாண்டு, காா்த்திகை மாத இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தீா்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்குளத்துக்கு எழுந்தருளியதும், உத்ஸவருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.