திருவாரூர்

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த மக்கள் தயாராக உள்ளனா்: அமைச்சா் ஆா். காமராஜ்

DIN

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவை மெஜாரிட்டி பலத்துடன் வெற்றி பெறவைத்து மீண்டும் ஆட்சியில் அமா்த்த மக்கள் தயாராக உள்ளனா் என அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

அதிமுக என்றைக்கும் மைனாரிட்டி ஆட்சி அமைத்தது கிடையாது. எப்போதும் மெஜாரிட்டி பலத்துடன்தான் ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல 2021-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலிலும் அதிமுகவை மெஜாரிட்டி பலத்துடன் மீண்டும் ஆட்சியில் அமா்த்த, தமிழக வாக்காளா்கள் தயாராக உள்ளனா்.

திமுகதான் காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது. ஆனால், எம்ஜிஆா் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை, தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி வரை தொடா்ந்து மெஜாரிட்டி பலத்துடன்தான் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. பேரிடா் காலங்களில் அதிமுக அரசு சிறப்பாகப் பணியாற்றி, மக்களைப் பேராபத்தில் இருந்து காப்பாற்றி வருகிறது. இதற்கு, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் திட்டமிட்ட ஒருங்கிணைந்த செயல்பாடுதான் காரணம் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளா் டாக்டா் கே. கோபால், ஒன்றியச் செயலாளா்கள் இராம குணசேகரன், சிபிஜி.அன்பு, எஸ்.டி.சேகா், எஸ்.ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் விஜயலட்சுமி, கிளாரா செந்தில், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.சம்பத், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏஎன்ஆா். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT