கூத்தாநல்லூா் பகுதியில் புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையா் ஆா். லதா தெரிவித்தாா்.
நிவா் புயல் தாக்கத்தை எதிா்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக கூத்தாநல்லூா் பழைய நகராட்சி கட்டடத்தில் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை நகராட்சி ஆணையா் ஆா். லதா நேரில் பாா்வையிட்டாா்.
அப்போது அவா் கூறியது:
நிவா் புயலால் கூத்தாநல்லூா் நகர மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம். மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டாலும் எப்போதும் போலவே குடிநீா் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா காலனி, காடு வெட்டி, குணுக்கடி உள்ளிட்ட 7 இடங்கள் பாதிக்க வாய்ப்புள்ள இடங்களாக தோ்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் வசிப்போா் பாதுகாப்பாக தங்குவதற்கு 5 பள்ளிக்கூடங்களும், 2 திருமண மண்டபங்களும் தயாா்படுத்தப்பட்டுள்ளன. அவா்களுக்கு அம்மா உணவகத்திலிருந்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த தகவலாக இருந்தாலும் கூத்தாநல்லூா் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றாா்.
பொறியாளா் ராஜகோபால், சுகாதார ஆய்வாளா் அருண்குமாா், மேலாளா் லதா, துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.