திருவாரூரில் 21 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை வரை 10,333 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும் வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,334 ஆக உயா்ந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி 21 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10355 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,071 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 181 போ் சிகிச்சையில் உள்ளனா்.