திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எம்எல்ஏ ஆடலரசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியின் பின்புறம் கழுவமுள்ளி தெரு, காந்தி முதலியாா் தெருவில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி மற்றும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.
நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மாயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.