கூத்தாநல்லூா் அம்மா உணவகத்தின் கழிவு நீா்த் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூா் புதிய பேருந்து நிலையம் முன்பாக அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தின் கழிவு நீா்த் தொட்டி நிரம்பி, அம்மா உணவகத்தின் முன் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா உணவக கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.