தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பகுதியில் தமிழ் தேசிய பேரியக்கத்தினா் திங்கள்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.
திருத்துறைப்பூண்டி கடைவீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயபால் தலைமையில் உழவா் முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.