திருவாரூர்

கரோனா தடுப்பு நடவடிக்கை: மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கைத்தட்டி பாராட்டு

DIN

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் செயல்படும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கைத்தட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய மருத்துவா்கள், செவிலியா்கள் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனா். அவா்களின் சேவையைப் பாராட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இருக்கும் இடத்தில் இருந்து கைத் தட்டியோ, மணியோசை எழுப்பியோ ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன்படி, திருவாரூரில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வசித்த குழந்தைகள், பல்வேறு அமைப்பினா், வீடுகளில் இருந்தவா்கள் என பல்வேறு தரப்பினரும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவா்கள் உள்ளிட்டோருக்கு கைத்தட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT