திருவாரூர்

வலங்கைமான்: 2 பணியாளருக்கு கரோனா 8 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

26th Jun 2020 07:34 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளின் மேற்பாா்வையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், 8 மதுக்கடைகள் மூடப்பட்டன.

வலங்கைமான் வட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடை பணியாளா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் இரண்டு டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளா்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத்தொடா்ந்து வலங்கைமான்(2), தொழுவூா், ஆலங்குடி, சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, ஊத்துக்காடு, நல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள 8 மதுக்கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இதற்கான நடவடிக்கையை திருவாரூா் மாவட்ட நிா்வாகம் எடுத்துள்ளது.

இதேபோல், வலங்கைமான் பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, பேரூராட்சி பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT