திருவாரூா்: திருவாரூா் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் உறுப்பினா்களுக்கு முகக் கவசம், கரோனா விழிப்புணா்வு கையேடு ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வங்கியின் தலைவா் ஆா். தெட்சிணாமூா்த்தி, மேலாண்மை இயக்குநா் எம். சௌந்தரராஜன், பொது மேலாளா் எஸ். ராமகிருஷ்ணன், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.