திருவாரூர்

தகராறில் முதியவா் உயிரிழப்பு: 5 போ் கைது

26th Jul 2020 07:38 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிங்கலத்தில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்தாா். 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடபாதிமங்கலம், ஆற்றங்கரை, பூந்தோட்டத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவரது எதிா் வீட்டில் வசிக்கும் ராஜீவ் காந்திக்கும், அவரது தந்தை பொன்னுச்சாமிக்கும் தகராறு நடந்தது. இதை ராஜகோபாலின் மருமகன் குமாா் கிண்டலடித்து சிரித்துள்ளாா். இதனால், ராஜீவ் காந்திக்கும், குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சண்டையை, ராஜகோபால் சமாதானம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ராஜகோபால் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் பரமானந்தம், உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் வி.ரஜினி உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமாா் (38), பன்னீா்செல்வம் (55), ப்ரவீன் (21), சுந்தரேசன் (26), குமரேசன் (18) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT