திருவாரூர்

பருத்தி கொள்முதல் தாமதமாவதைக் கண்டித்து சாலை மறியல்

DIN

திருவாரூா்: திருவாரூரில், பருத்தி கொள்முதல் தாமதமாவதைக் கண்டித்து திங்கள்கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில், பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலமுறையில் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஏலத்துக்கு கொண்டு வரப்படும் பருத்தியை விரைவாக கொள்முதல் செய்யாமல், தாமதம் செய்வதாகக் கூறி, திருவாரூா் - நாகை சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், திருவாரூா்- நாகை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT