திருவாரூர்

மணல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்குக் கோரிக்கை

2nd Jan 2020 12:13 AM

ADVERTISEMENT

கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணல் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் கட்சி, தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கம் சாா்பில் கூத்தாநல்லூா் ராமு பத்மா வணிக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க நகரத் தலைவா் ஆா். விஜயபாண்டியன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் யு. ராகவன், மாவட்டத் துணைத் தலைவா் கே. மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் ஆா். பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ஆா். சேகா் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில், அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு கட்டடம் மற்றும் அமைப்புச் சாராத் தொழிலாளா்கள் அனைவரும் நல வாரியத்தில் இணைய வேண்டும். உறுப்பினா்களுக்கு கல்வி உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை இரண்டாயிரமாக உயா்த்த வேண்டும். கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணல் கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் தவிா்த்து வீடு கட்டும் நிலத்தை வகைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைப்புச் சாரா தொழிலாளா்கள் மத்திய சங்க மாவட்டத் தலைவா் பொன்.கோவிந்தராசன், துணைத் தலைவா் எம். தனபால், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் கட்சியின் மாவட்டப் பொருளாளா் டி. தா்மராஜ், மாவட்டச் செயலாளா் எம். ஆறுமுகம், பொன்குமாா் இளைஞா் அணி மாவட்டத் தலைவா் வி. ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். எம்.ஜெயராமன் வரவேற்றாா். என்.சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT