நன்னிலம்: நன்னிலம் பகுதியில் உள்ள பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ந.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி தலைமை ஆசிரியா்கள் ஜா.புகழேந்தி, வ.சம்பத் மற்றும் ஆசிரியா்களும், மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா். கீரனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் எஸ்.சம்பத், தலைமையாசிரியா் வாசுதேவன் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
மாப்பிள்ளை குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா, தலைமையாசிரியா் எம். ஜெயமீனாட்சி, ஆசிரியா் ஏ. சாமிநாதன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் க. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் க. முரளிகிருஷ்ணன் வரவேற்றாா். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சிபிஜி. அன்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் நடுகந்தங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் மேனாங்குடி தெ.புகழேந்தி, இஞ்சிக்குடி பாண்டித்துரை ஆகியோா் கலந்துகொண்டனா். பட்டதாரி ஆசிரியா் ந. மாரியப்பன் நன்றி கூறினாா்.
இதேபோல், நன்னிலம் வட்டத்தில் உள்ள கடுவங்குடி, கொல்லாபுரம், மேனாங்குடி, திருமீயச்சூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.