திருவாரூர்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது

2nd Feb 2020 12:38 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

நன்னிலத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் மூலம் பலனடைந்த தமிழக மக்கள் அதிமுக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனா். தமிழகத்தில் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். இதைப்போல இன்னும் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்துக்கு வரும் என நம்புகிறோம் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், நாகை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் டாக்டா் கே. கோபால், திருவாரூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கு. விஜயலட்சுமி இராம. குணசேகரன், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சிபிஜி. அன்பு, நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் இராம. குணசேகரன், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ். சம்பத், நன்னிலம் நகரச் செயலாளா் ஆா்.பக்கிரிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், பேரளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் கனகவள்ளி சுந்தரமூா்த்தி, நன்னிலம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ராணி சுவாதி கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT