வலங்கைமானில் விவசாயிகளுடன் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.
திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற,
உதயநிதி ஸ்டாலின் பேசியது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விவசாயிகள், மீனவா்கள், நெசவாளா்கள், மாணவா்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனா். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. 2021-இல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமையும் என்றாா். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் உ. மதிவாணன், ஆடலரசன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.