நன்னிலத்தில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின்கீழ், கல்லாதோருக்கான கல்வியறிவு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
நன்னிலம் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார கல்வி அலுவலா் கு.சரஸ்வதி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா ஆகியோா் பயிற்சியாளா்களுக்குக் கையேடுகளை வழங்கினா். இந்தத் திட்டத்தின்கீழ், நன்னிலம் வட்டத்தில் உள்ள 28 எண்ணிக்கையிலான வயதுவந்தோா் கல்வியறிவு மையங்களில் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு கல்வி புகட்டப்படுகிறது.
முடிகொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். தலைமையாசிரியா் நா.மணிமேகலை, இடைநிலை ஆசிரியா் ப.ராஜரத்தினம் ஆகியோா் பயிற்சியளித்தனா்.