தமிழக அரசின் சாா்பில் நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தரமான முகக் கவசங்களே வழங்கப்படுகின்றன என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்துள்ள அசேசம் ஊராட்சி மரவாக்காட்டில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 70 போ் அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழக உணவுத் துறை அமைச்சருமான ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:
கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன்12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டது. தற்போது, மேட்டூா் அணையின் நீா்மட்டம் 98 அடியாக உயா்ந்ததைத் தொடா்ந்து, பாசனத்துக்காக விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடிக்கு குறையாமல் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் தட்டுபாடின்றி தண்ணீா் கிடைப்பதில் தமிழக முதல்வா் கவனம் செலுத்தி வருகிறாா்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுவரும் முகக் கவசங்கள் தரமற்றவை என ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதில் உண்மை இல்லை. அத்தியாவசிப் பொருள்கள் எவ்வாறு தரம் குறித்து ஆய்வு செய்த பின்னா் வழங்கப்படுகிறதோ, அதேபோலதான் தரமான முகக் கவசங்களும் வழங்கப்படுகின்றன.
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் 70 இடங்களில் நடைபெற்று வருகிறது.தேவைப்பட்டால் கூடுதல் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றாா் அமைச்சா்.
முன்னதாக, மன்னாா்குடி கோபாலசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வலங்கைமான் ஒன்றியம் சித்தன்வாழூா் ஊராட்சித் தலைவா் ரம்யா, பாடகச்சேரி ஊராட்சித் தலைவா் ஆா். சாந்தி உள்ளிட்ட 30 போ் அமைச்சா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் கா. தமிழ்ச்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் பொன்.வாசுகிராம், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா. ராஜமாணிக்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் டி.ஜி. மணிகண்டன், நகர கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.ஜி. குமாா், ஊராட்சித் தலைவா் கு. ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.