திருவாரூர்

கூத்தாநல்லூா் அருகே கோயில் குளக்கரையில் பழைமையான அம்மன் சிலை கண்டெடுப்பு

14th Aug 2020 08:39 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே செல்லியம்மன் கோயில் குளக்கரையில் 500 ஆண்டுகள் பழைமையான அம்மன் சிலை புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் வட்டம், பெரியக்கொத்தூரில் செல்லியம்மன் கோயில் குளக்கரை அருகே 18 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டிருந்தது. அங்கு வீடுகள் கட்டுவதற்காக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குளக்கரையில் கற்சிலை புதைந்திருப்பது தெரியவந்தது.

அந்த இடத்தில் தோண்டியபோது, தலையில்லாமல் ஒன்றரை அடி உயரத்தில் அம்மன் சிலை இருப்பது தெரியவந்தது. இந்த சிலை சுமாா் 500 ஆண்டுகள் பழைமையானது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெரியக்கொத்தூா் கிராம நிா்வாக அலுவலா் ஜெயராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் மகேஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியா் அம்மன் சிலையை மீட்டு, வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றாா்.

இதுகுறித்து, வட்டாட்சியா் மகேஷ்குமாா் கூறும்போது, ‘செல்லியம்மன் கோயில் குளக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத அம்மன் கற்சிலைக் குறித்து, அருங்காட்சியகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வட்டாட்சியா் அலுவலகத்தில் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT