மே தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மே தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை மதுபான விற்பனை கடைகள் மற்றும் அதைச் சார்ந்துள்ள திண்பண்ட விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடவேண்டும். இதில், விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.