பம்பு செட் கொட்டகைக்கு தீ வைப்பு

கூத்தாநல்லூர் அருகே பம்பு செட் கொட்டகைக்கு அண்மையில் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

கூத்தாநல்லூர் அருகே பம்பு செட் கொட்டகைக்கு அண்மையில் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
வடகோவனூர், ஜீவா தெருவைச் சேர்ந்தவர் மதியழகன் (47). இவருக்குச் சொந்தமான பம்பு செட் கொட்டகைக்கு வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனராம். தகவலறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மா.வே. சம்பத்குமார் தலைமையில், தீயணைப்புப் படை வீரர்கள் வந்து  கடுமையாக போராடி, தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர். இதில், ரூ.45 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. முன்விரோதம் காரணமாக பம்பு செட்டுக்கு தீ வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com