திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள 9 அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள எழிலூர் ,தொண்டியக்காடு, கரையங்காடு, கீழவாடியக்காடு, ஆலங்காடு, கீழப்பெருமழை, செங்கங்காடு, மாங்குடி, நாச்சிக்குளம் ஆகிய 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. மேலும், கீழ்கண்ட பள்ளிகள் 90 சதவீதத்துக்கும் அதிகமான சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. அதன் விவரம்: ஜாம்ப"வானோடை அரசுப் பள்ளி 98, நெடும்பலம் அரசுப் பள்ளி 96, எடையூர் அரசுப் பள்ளி 96, பாண்டி அரசுப் பள்ளி 95, தில்லைவிளாகம் அரசுப் பள்ளி 94, தலைக்காடு அரசுப் பள்ளி 90, ஆலத்தம்பாடி அரசுப் பள்ளி 97, திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளிகள் 92 (ஆண்கள்) பெண்கள் 95, ஆலத்தம்பாடி அரசுப் பள்ளி 97, முத்துப்பேட்டை அரசுப் பள்ளி 93 சதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.