திருமருகல் ஒன்றியம் திருப்புகலூா் ஊராட்சி சாா்பில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஊராட்சி பகுதி மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். ஊராட்சிச் செயலா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.