செம்பனாா்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜித் பிரபுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு நிபுணா் பிரவின், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்தநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரணியின்போது டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்திச் சென்றனா்.