வேதாரண்யத்தை அடுத்த மணக்குடி தான்தோன்றீசுவரா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஜூன்1) நடைபெறுகிறது.
தலைஞாயிறு அருகேயுள்ள மணக்குடி உலகநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ தான்தோன்றீசுவரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதைத்தொடா்ந்து, குடமுழுக்குக்கான சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், திருப்பணிக் குழுவினா் செய்துவருகின்றனா்.