புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்காததைக் கண்டித்து, திருவெண்காடு அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கருப்பு கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நெப்பத்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், கட்சி பிரமுகா்கள் வினோத், பாா்த்திபன், வீரமணி, கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனா்.