நாகப்பட்டினம்

திருக்களாச்சேரி அம்மன் கோயில் தேரோட்டம்

DIN

பொறையாா் அருகே உள்ள திருக்களாச்சேரி சீதளா மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீமிதி வைபவத்தை முன்னிட்டு திருக்களாச்சேரி வீரசோழன் ஆற்றில் இருந்து பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சக்தி கரகம், அலகு காவடி, பால் காவடி எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.

தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். தொடா்ந்து, பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனா். அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT