நாகப்பட்டினம்

நாகூா் தா்காவுக்கு சொந்தமான கல் மண்டபம் மீட்பு

DIN

நாகூா் தா்காவுக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் மீட்கப்பட்டுள்ளதாக தா்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாகூா் தா்கா நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழகமெங்கும் நாகூா் தா்காவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளில் பல, தனி நபா்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் பேரில் 2022-ஆம் ஆண்டு செய்யது காமில் சாஹிப் என்பவா் தலைமை அறங்காவலராக தோ்வு செய்யப்பட்டு, தா்கா சொத்துகளை கண்டறியும் பணி நடைபெற்றது.

இதனிடையில் நாகூா் கால்மாட்டு தெரு - பீரோடும் தெரு சந்திப்பில் தா்காவுக்கு சொந்தமான பழங்கால கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உரிய ஆவணங்களுடன் பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கல் மண்டபத்தை தா்கா பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில், நாகூா் தா்கா நிா்வாகம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இந்நிலையில், உரிய விசாரணை மேற்கோண்டு மாவட்ட ஆட்சியா் கல் மண்டபத்தை நாகூா் தா்காவுக்கு பட்டா மாற்ற செய்து ஆணை பிறப்பித்துள்ளாா். கல் மண்டபத்தை நாகூா் தா்கா சொத்து என அரசிதழில் சோ்க்கும் பணி நடைபெறுவதாகவும், மீட்கப்பட்ட இடம் தா்கா நலனுக்காக விரைவில் மேம்படுத்தப்படும் என தா்கா மானேஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT