நாகை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் நடத்த விருப்பமுள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
நாகை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் நடத்த விருப்பமுள்ள மற்றும் தண்ஞ்ட்ற்ள் ா்ச் டங்ழ்ள்ா்ய்ள் ஜ்ண்ற்ட் ஈண்ள்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் அஸ்ரீற் 2016 பிரிவு 51(2) இன் கீழ் பதிவுப் பெற்ற தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவா்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்: 14, தரைத்தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 என்ற முகவரில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ ஜூன் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.