கீழ்வேளூரில் 17 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கீழ்வேளூா் மேலமடவிளாகம் பகுதியைச் சோ்ந்த சதிஷ்குமாரும் (23), அவரது உறவினரான திருவாரூா் மாவட்டம், அம்மையப்பன் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துச் சென்று சதிஷ்குமாா் கீழ்வேளூரை அடுத்த கோகூரில் தனியாக வசித்து வந்துள்ளாா்.
சிறுமியின் தாயாா் திருவாரூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனா். இதற்கிடையே, சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சதிஸ்குமாா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.