வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழையில் பசு மாடு உயிரிழந்தது.
தென் மேற்கு திசையிலிருந்து வீசிய பலத்த சூறைக்காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம் செவ்வாய்க்கிழமை காலையில் சீரானது. பலத்த இடியின் காரணமாக ஆயக்காரன்புலம் உள்ளிட்ட கிராமங்களில் மின்சார சாதணங்கள் பழுதடைந்தன. இடி, மின்னல் தாக்கியதில் தென்னடாா் ஊராட்சி வெ. தேவதாஜ்க்கு சொந்தமான பசுமாடு உயிரிழந்தது. செம்போடை கிராமத்தில் விவசாயிக்கு சொந்தமான மாடுகள் கட்ட பயன்படுத்தும் கூரை வீடு மின்னல் தாக்கியதில் தீக்கிரையானது. கன மழையின் காரணமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.