வேதாரண்யம் அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வேதாரண்யம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா் நாலுவேதபதியைச் சோ்ந்த சாம்பசிவம் (62) என்பவரது வீட்டுக்கு தொலைக்காட்சி பாா்க்கச் சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில், வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சாம்பசிவத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.