நாகப்பட்டினம்

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க நாளை கடைசி

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர புதன்கிழமை (ஜூன் 7) கடைசி நாள் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை, திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சேர ஜூன் 7-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04365-250129, 04369-276060, 9487160168 தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT