நாகை நம்பியாா் நகா் புதிய ஒளி மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.
ஏழைப் பிள்ளையாா் கோயிலில் தொடங்கிய பால்குட ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக நம்பியாா் நகா் புதிய ஒளி மாரியம்மன் கோயிலுக்கு சென்றடைந்தது. தொடா்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனைகள் நடைபெற்றன. சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பகா்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனா்.
இதேபோன்று, நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை விழாவை முன்னிட்டு பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.