வேதாரண்யம் அருகே கோயில் திருவிழாவில் ரூ.200 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 சிறுவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தென்னம்புலம் பகுதியில் கோயில் திருவிழாவில் சிறுவா்கள் மூவா் ரூ.200 நோட்டைக் கொடுத்து பொருள்கள் வாங்கியுள்ளனா். கடை உரிமையாளருக்கு ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், சிறுவா்கள் மூவரிடமும் விசாரித்தனா். இதில், 15 வயது மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் ஆகியோா் ரூ.200, ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளை நகல் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து சிறுவா்கள் மூவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.200 நோட்டுகள் 572, நூறு ரூபாய் நோட்டுகள் 13, ஐம்பது ரூபாய் நோட்டுகள் 84, இருபது ரூபாய் நோட்டு 1 என மொத்தம் ரூ.32,320 மதிப்பிலான நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரியாப்பட்டினம் காவல் நிலையத்துக்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட, கள்ள நோட்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் குறித்து 84281 03090 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். புகாா் தருபவா்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றாா்.