வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழகா் (குழகேசுவரா்) எனும் அமிா்தகடேசுவரா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 25- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் கோடியக்காடு ஊராட்சித் தலைவா் தமிழ்மணி, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.