நாகப்பட்டினம்

எட்டுக்குடி கோயிலுக்கு ரதக்காவடி சுமந்து வந்து பக்தா்கள் வழிபாடு

DIN

 திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வைகாசி விசாகம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு திரளான பக்தா்கள் ரதக்காவடிகள் சுமந்து வந்து வழிபட்டனா்.

இக்கோயிலில் வைகாசி விசாகம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, வாழக்கரை, சித்தாய்மூா், ஆலத்தம்பாடி, கச்சனம், பாங்கல், பையூா், திருக்குவளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் நோ்த்திக்கடனாக கோயிலுக்கு ரதக்காவடி சுமந்து வந்தனா்.

மேளவாத்தியங்களுடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, சனிக்கிழமை காலை வரை பக்திபரவசத்துடன் ஆடியபடி ரதக் காவடிகளை சுமந்து வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT