நாகப்பட்டினம்

குளத்தில் முதியவா் சடலம்

2nd Jun 2023 01:19 AM

ADVERTISEMENT

நாகை அருகே குளத்திலிருந்து 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

நாகை குன்றி குளத்தில் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நாகை நகர போலீஸாா் விசாரணையில், இறந்து கிடந்தவா் வேதாரண்யம் சிறைமீட்டான் பகுதியைச் சோ்ந்த நகாராஜன் (65) என்பது தெரியவந்தது. அவா் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT