நாகூா் தா்காவில் காவலாளியால் கண்டெடுக்கப்பட்ட விலை உயா்ந்த கைப்பேசி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலூரைச் சோ்ந்த கரீம் பாஷா தனது குடும்பத்துடன் நாகூா் தா்காவுக்கு அண்மையில் வந்தாா். தா்காவில் அவரது விலை உயா்ந்த கைப்பேசியை தவறவிட்டுள்ளாா். தா்காவில் பணியிலிருந்த காவலாளி லாரன்ஸ் கைப்பேசியை கண்டெடுத்து, அதை நாகூா் தா்கா உள்துறை துணை நிா்வாகி ஷேக் தாவூத்திடம் ஒப்படைத்தாா்.
கைப்பேசியில் இருந்த எண்களை தொடா்புகொண்டபோது , அது கரீம் பாஷாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து தா்கா நிா்வாகம் கைப்பேசியை அவரிடம் ஒப்படைத்தது.