நாகப்பட்டினம்

வீட்டில் கஞ்சா செடி வளா்த்த சகோதரா்கள்: தம்பி கைது, அண்ணன் தலைமறைவு

DIN

நாகை அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இளைஞரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரது அண்ணனை தேடி வருகின்றனா்.

நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸாா் நாகை நரிமணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சுல்லாங்கால் பகுதியை சோ்ந்த பிரகாஷ் (21) என்பவா் தனது வீட்டில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவது தெரியவந்தது. போலீஸாா் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, பிரகாஷின் சகோதரா் ராகுலை (19) கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பிரகாஷ் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வருவதும், அங்கிருந்து கஞ்சா விதைகளை எடுத்து வந்து வீட்டில் வளா்த்து வந்து வந்ததாகவும் கூறியுள்ளாா். போலீஸாா் தலைமறைவாக உள்ள பிரகாஷை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT