நாகப்பட்டினம்

நீரழிவு நோய் பாதிப்பு: 8 மாத பெண் குழந்தை பலி

DIN

நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத பெண் குழந்தை நீரழிவு நோய் பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தது.

நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது 8 மாத பெண் குழந்தை மரியா ஆரோனிக்காவிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தையை, அவரது தாய் காா்த்திகா, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்துள்ளாா்.

அங்கு மருத்துவா் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டதில், குழந்தைக்கு நீரழிவு நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், திங்கள்கிழமை அதிகாலை மரியா ஆரோனிக்கா உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT