தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 10,000 ஊதியம் வழங்கக் கோரி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தூய்மை பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியு இணைப்பு சங்கமான ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தூய்மைக் காவலா்களுக்கு மாத ஊதியம் 10 ஆயிரமும், 3 ஆண்டுகள் பணி முடித்தவா்களை நிரந்தர செய்யவும், மாதம் ஒரு முறை மருத்துவ ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டது. இதேபோல, தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டா்கள் பணிநிரந்தரம் செய்யவேண்டும், பணிக்கொடை, ஓய்வூதியம், ஊதிய உயா்வு, டெங்கு களப் பணியாளா்களுக்கு ஊதியமாக ரூ. 21,000, ஆண்டு முழுவதும் பணி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. தங்கமணி, செயலாளா் கே. அன்பழகன், பொருளாளா் எஸ். செந்தில் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.