திருமருகல் அருகே தீக்குளித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
திருக்கண்ணபுரம் ஊராட்சி சின்னையன் தோப்பு பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் விவேக் (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பா் அய்யப்பன் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்து வந்தாராம். இந்நிலையில், ஜன.28-ஆம் தேதி வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டாராம். இதையடுத்து, உடனடியாக மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.