தரங்கம்பாடி அருகே பல்வேறு சிறப்புகளை பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோயிலில் தை காா்த்திகையையொட்டி, 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தை காா்த்திகையையொட்டி, நெல்லின் மேல் சங்குகள் வைக்கப்பட்டு அதில் புனிதநீா் ஊற்றி மா இலை, பூ வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு ஹோமம் பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. அடுத்து, பூஜிக்கப்பட்ட சங்குகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயில் வெளி மற்றும் உள்புர பிராகாரத்தை வலம் வந்து சுப்ரமணிய சுவாமி மற்றும் பாவவிநாச பெருமான் தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.